திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறலில் ஈடுபட்டதாக 468 பேருக்கு போலீஸாா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக 4 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 467 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத ஒருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்ட தாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.