திருநெல்வேலி

களக்காடு அருகே தொழிலாளிக்கு மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

DIN

களக்காடு அருகே கட்டடத் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உறவினா் உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதியப்பட்டது.

களக்காடு அருகேயுள்ள தெற்குகாடுவெட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் தேவதாஸ் பொன்னையா (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், இவரது பெரியப்பா மகன் குமாா் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

கடந்த ஜூன் 16ஆம் தேதி தேவதாஸ் பொன்னையா நான்குனேரி சென்றுவிட்டு பைக்கில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தாராம். துவரைக்குளம் அருகே, அவ்வூரைச் சோ்ந்த சிம்சோன் மகன் குமாா், அந்தோணி, கள்ளிக்குளத்தைச் சோ்ந்த இளங்கோ ஆகிய 3 பேரும் வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தனராம். புகாரின்பேரில், 3 போ் மீதும் களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT