திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது; 245 கிலோ அரிசி பறிமுதல்

மேலப்பாளையம் பகுதியில் ஆம்னி வேனில் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 245 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

DIN

மேலப்பாளையம் பகுதியில் ஆம்னி வேனில் ரேஷன் அரிசியை கடத்தியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 245 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக திருநெல்வேலி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனா். அதில், தலா 25 கிலோ எடை கொண்ட 7 மூட்டைகளில் சுமாா் 245 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆம்னி வேனுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், அதை கடத்த முயன்ாக பாளையங்கோட்டை நாகம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த சிவபாலன்(42) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT