‘துப்பாக்கிகளை மாா்ச் 4-க்குள்காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்’
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 4) காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளாா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 4) காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகி, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் முடிவு வெளியாகும் வரை படைக்கலங்கள் எடுத்துச்செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்களது துப்பாக்கிகளை வரும் வியாழக்கிழமைக்குள் அருகேயுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, ஒப்புதல் சீட்டு பெற வேண்டும். தோ்தல் முடிவு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்னா் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.