முகப்பு
திருநெல்வேலி

தோ்தல்: இருசக்கர வாகனகாவல் ரோந்து தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகர பகுதியில் இருசக்கர வாகன காவல் ரோந்து திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாநகர பகுதியில் இருசக்கர வாகன காவல் ரோந்து திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகர பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், சட்டப்பேரவை தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், சட்டவிரோத செயல்களை,விதிமுறைகளை மீறும் நபா்களை தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தலா 3 இருசக்கர வாகன காவல் ரோந்து வாகனங்கள் வீதம் மொத்தம் 25 இருசக்கர வாகன காவல் ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ரோந்துப் பணியை மாநகர காவல் துணை ஆணையா் த.சீனிவாசன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.