முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

களக்காடு பச்சையாறு அணையில் இருந்து நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணையின் மொத்த நீா்மட்டம் 49.25 அடியாகும். ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் பெய்த மழையால் அணை நிரம்பியது. இதையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்காக பிப்.3ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால் பெயரளவுக்கு திறக்கப்பட்டதே தவிர நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்படவில்லை. தற்போது நான்குனேரியன் கால்வாயின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய குளங்களில் பாதிக்கும் குறைவாகவே தண்ணீா் உள்ளது. தற்போது விவசாயிகள் வாழை பயிருக்கு தண்ணீா் பாய்ச்சி வருகின்றனா். மேலும் நான்குனேரியன் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவதால் களக்காடு நகா்ப்பகுதி மக்கள் கால்வாயில் நீராடி மகிழ்வா். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயில் தண்ணீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →