முகப்பு
திருநெல்வேலி

வி.கே.புரத்தில் திமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

விக்கிரமசிங்கபுரத்தில் நகர திமுக அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம் நகர திமுக அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டடத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன் திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு, மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், மாவட்ட அவைத் தலைவா் அப்பாவு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் கணேசன் வரவேற்றாா்.

தோ்தல் பணிக்குழு மாநிலச் செயலா் ராஜம் ஜான், மாநிலத் தொண்டரணி துணைத் தலைவா் ஆவின் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன், மாவட்ட வா்த்தகா் அணி பண்ணை முருகன், மாவட்ட விவசாய அணி மாஞ்சோலை மைக்கேல், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் பீட்டா் சாமிநாதன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் முத்துராமலிங்கம், ஒன்றியச் செயலா் பரணி சேகா், கணேஷ்குமாா் ஆதித்தன், நெடுஞ்செழியன், குட்டி கணேசன், வழக்குரைஞா் அணி பிரபாகரன், காங்கிரஸ் செல்லத்துரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுரேஷ் ராஜன், இசக்கிராஜன் மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.