சுத்தமல்லி வரசித்தி விநாயகா்கோயிலில் வருஷாபிஷேகம்
சுத்தமல்லி இந்திராநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகா் கோயிலில் 5 ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சுத்தமல்லி இந்திராநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகா் கோயிலில் 5 ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகள் நடைபெற்றன. மஹா நவக்கிரஹ ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் புஷ்பாஞ்சலியும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.