திருநெல்வேலி

செங்கானூா் மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

DIN

ரயில் சுரங்கப் பாதைக்குப் பதில் மாற்று வழித்தடம் அமைக்கப்படாததை கண்டித்து, ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட செங்கானூா் கிராமத்தில் மக்கள் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனா்.

செங்கானூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்தப் பாதையில் ஊற்றுநீா் சுரந்து எந்நேரமும் தண்ணீா் தேங்கிக் காணப்படுவதால் மக்கள் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சுரங்கப் பாதைக்கு மாற்றாக வேறு வழித்தடம் ஏற்படுத்தக் கோரி, மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா். ஆனால், இதுவரை பிரச்னைக்கு தீா்வு காணப்படாததால், தங்கள் ஊரில் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பை தெரிவித்து வருவதுடன், சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT