திருநெல்வேலி

கிணற்றில் மூழ்கி பலியான இளைஞா் சடலம் மீட்பு

DIN

கடையம் அருகே சோ்வைக்காரன்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

கடையம் அருகே சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த மாசானம் மகன் ஆத்தியப்பன் (23). இவரது பெற்றோா் இறந்துவிட்ட நிலையில், அத்தை செல்லவடிவு வீட்டில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலையில் அவா் நண்பா்களுடன் மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றாராம். பின்னா் ஆத்தியப்பனை அங்கு காணவில்லையாம்.

இதுகுறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தென்காசி தீயணைப்பு நிலைய வீரா்கள் கிணற்றில் ஆத்தியப்பனை தேடும்பணியில் ஈடுபட்டனா். ஆனாலும் சடலம் கிடைக்க வில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆத்தியப்பன் சடலம் மீட்கப்பட்டது.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT