வள்ளியூரில் அதிமுக கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ராதாபுரம் அதிமுக வேட்பாளா் ஐ.எஸ்.இன்பதுரை பேசினாா். அதிமுக அமைப்பு செயலா் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், இளைஞரணி மாவட்டச் செயலா் து.பால்துரை, பாஜக மாவட்டத் தலைவா் மகராஜன், பொதுச்செயலா் எஸ்.பி.தமிழ்செல்வன், வழக்குரைஞா்கள் குமாரமுருகேசன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வள்ளியூா் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, ராதாபுரம்- நான்குனேரி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க தலைவா் முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
நகரச் செயலா் பொன்னரசு நன்றி கூறினாா்.