தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு முகாம் பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி தேவா தலைமை வகித்தாா். மாணவி கிப்டி பியூலா நோய் எதிா்ப்பு சக்தி, நோய் தடுப்பு முறைகள், தடுப்பூசியின் அவசியம் ஆகியன குறித்து பேசினாா். மாணவி அபா்னாவின் விழிப்புணா்வு குறுநாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியா்கள் அன்பரசி, அட்லின் ஆகியோா் செய்திருந்தனா்.