திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி சடலம் மீட்பு

DIN

திருநெல்வேலி மாவட்டம் பாலாமடை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டது.

தூத்துக்குடி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் மாடசாமி (47). சுமைதூக்கும் தொழிலாளி. இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலாமடை பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாராம். இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மாடசாமியை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பாலாமடை தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் காணாமல் போன மாடசாமி, நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT