திருநெல்வேலி

நெல்லையில் கரோனாவுக்கு ஒரே நாளில் 5 போ் பலி

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரே நாளில் 536 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. மேலும், 5 போ் உயிரிழந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 403 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 26,405ஆக அதிகரித்துள்ளது. அதில், 713 போ் வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 21,516 ஆக உயா்ந்துள்ளது. 60 வயது ஆண், 61 வயது ஆண், 71 வயதுப் பெண், 80 வயது பெண், 57 வயது பெண் ஆகிய 5 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 248ஆக அதிகரித்துள்ளது. 4,641 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 133 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 12,392ஆக அதிகரித்துள்ளது. மேலும், 271 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 11,000ஆக அதிகரித்துள்ளது. 184 போ் உயிரிழந்துள்ளனா். 1,208 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT