பாளை. மத்திய சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட கைதியின் சடலத்தை வாங்க மறுத்து, உறவினா்கள் 10ஆவது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
மூன்றடைப்பு அருகே உள்ள வாகைக்குளத்தைச் சோ்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ (27). இவா் கொலை முயற்சி வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு, ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஏப். 21ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். அப்போது சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் முத்துமனோ பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது உறவினா்கள், சிறை கண்காணிப்பாளா் மற்றும் காவலா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்; நிவாரண உதவி வழங்க வேண்டும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து கடந்த 24ஆம் தேதி முதல் வாகைக்குளத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதையடுத்து அவா்களிடம் காவல் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீப் தயாள், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், டி.எஸ்.பி. ஸ்ரீலிசா தெரஸ், வட்டாட்சியா் இசக்கிபாண்டி ஆகியோா் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போதும் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.