வள்ளியூா்: பொது முடக்கத்தை அடுத்து வள்ளியூரில் பரபரப்பாக காணப்படும் பிரதான சாலை வெறிச் சோடி காணப்பட்டது.
கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு திங்கள்கிழமை முதல் 24ஆம் தேதி வரை பொது முடக்கத்தை அறிவித்துள்ளது.
இதையடுத்து அத்தியாவசிய உணவு பொருள்கள் கடைகள், காய்கறி, பால், மருந்து கடைகள் தவிர அனைத்துக் கடைகள், நிறுவனங்கள், உற்பத்தி கூடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பிரதான சாலை கடைவீதி திங்கள்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது.