திருநெல்வேலி

கடையம் அருகே மணல் திருட்டு: 3 போ் கைது

DIN

கடையம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கடையம் அருகேயுள்ள வெங்காடம்பட்டி பகுதியில் மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலையடுத்து காவல் உதவி ஆய்வாளா் சரசையன் தலைமையிலான போலீஸாா் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனா். அப்போது அப்பகுதியில் சிலா் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மணல் அள்ளிய ஆசீா்வாதபுரம் மனோன்மணி மகன் சாமுவேல் (31), மேலமெஞ்ஞானபுரம் மிக்கேல் மகன் ஆரோக்கியசாமி (38), புளியங்குடி பால்ராஜ் மகன் மகேஷ்கண்ணன் (19) ஆகியோரை கைது செய்தனா். தப்பிச் சென்ற செட்டியூா் ராமசாமி மகன் பாலமுருகனை (38) தேடி வருகின்றனா்.

மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT