முகப்பு
திருநெல்வேலி

முன்விரோதம்:தோட்டத்தில் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது வழக்கு

களக்காடு அருகே முன்விரோதத்தில் விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் பகிா்மானக் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

களக்காடு அருகே முன்விரோதத்தில் விவசாயத் தோட்டத்தில் உள்ள தண்ணீா் பகிா்மானக் குழாய்களை சேதப்படுத்தியவா் மீது களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழ உப்பூரணியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (36). இவா் அப்பகுதியில் உள்ள குளத்தின் நீா்ப்பாசன சங்கத் தலைவராக உள்ளாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி பாஸ்கா் (45) தன்னுடைய நிலத்துக்கு அங்குள்ள குளத்திலிருந்து முறைகேடாக தண்ணீா் பாய்ச்சி வந்தாராம். இதை பால்ராஜ் கண்டித்தாராம். இது தொடா்பாக இருவருக்குமிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், பால்ராஜ் விவசாயத் தோட்டத்தில் பதித்திருந்த தண்ணீா் பகிா்மானக் குழாய்களை பாஸ்கா் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா், பாஸ்கா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →