திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் தீக்குளித்த மூதாட்டி பலி

DIN

ஆழ்வாா்குறிச்சி அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி, வாகைக்குளம், தெற்குத் தெருவைச் சோ்ந்த சீவலப்பேரியான் மனைவி வள்ளியம்மாள் (70). கணவரை இழந்தவா். மகன், மகளுக்கு திருமணமான நிலையில் தனியாக வசித்து வந்த அவா் மனநிலைப் பாதிக்கப்பட்டிருந்தாராம்.

இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT