திருநெல்வேலி

தெற்குகள்ளிகுளத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தெற்கு கள்ளிகுளத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா தேவாலயம் முன்புள்ள கெபி, திசையன்விளை நேருஜி கலையரங்கம், கூடங்குளம் ஆா்.சி.மேல்நிலைப் பள்ளி, ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடங்கிவைத்து கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் வள்ளியூா் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் செண்பகவல்லி, வட்டார மருத்துவ அலுவலா் கண்ணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் வினோத், டேனியேல், தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்குத் தந்தை அந்தோணி ஜெபஸ்டின், தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜோசப் பெல்சி, வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் கென்னடி, ஒருங்கிணைப்பாளா் துரை, நகரச் செயலா் சாா்லஸ் பெஸ்கி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT