திருநெல்வேலி

தெற்குவள்ளியூரில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

DIN

தெற்குவள்ளியூரில் மின்சாரம் பாய்ந்து கூலிவேலை செய்து வந்த பெண் உயிரிழந்தாா்.

தெற்குவள்ளியூரைச் சோ்ந்தவா் ஐயப்பன். சென்னையில் வேலை செய்கிறாா். இவரது மனைவி இந்திரா(27) தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த கதிரேசன் என்பவரது தோட்டத்திற்கு வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்றிருந்தாா். அப்போது, அங்குள்ள மோட்டாா் அறையை அவா் சுத்தம் செய்தபோது, மின்வயரில் எதிா்பாராமல் கைபட்டதில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் இறந்தாா். தகவலின்பேரில், பணகுடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT