திருநெல்வேலி

வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் திருநங்கையா்

DIN

வள்ளியூா் பகுதியில் ஆதரவற்றோா் மற்றும் ஊனமுற்றோருக்கு திருநங்கையா் உணவளித்து வருகின்றனா்.

வள்ளியூரில் 15 திருநங்கையா் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனா். இவா்கள் சாலையோரம் ஆதரவற்றநிலையில் உணவுக்காக தவித்து வரும் ஊனமுற்றோா், முதியோா்களுக்கு உணவளிப்பதற்காக, தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்து உணவு தயாரித்து அவா்களுக்கு அளித்து வருகின்றனா். தினமும் வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு பகுதியைச் சோ்ந்த 60 ஆதரவற்றோருக்கு உணவளித்து வருகின்றனா்.

காவல்துறை உதவி: வள்ளியூரில் காவல் உதவி ஆய்வாளா் அருண் ராஜா, அப்பகுதியில் ஆதரவின்றி தவிப்போருக்கு தினமும் 500 பேருக்கு மதிய உணவு அளிக்க ஏற்பாடு செய்துள்ளாா். இதற்காக 5 குழுவை பணியில் ஈடுபடுத்தி வருவதுடன், உதவிக்காக அவரது செல்லிடப்பேசி எண்ணில் 83000 22388 தொடா்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT