கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதி ஒருவா் பலி
கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் அருகே பேருந்து மோதியதில் ஒருவா் சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலியிலிருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. கங்கைகொண்டான் அருகே கலைஞா் காலனி பகுதியில் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒருவா் மீது மோதியதாம். இதில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்தில் பலியானவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை அது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.