நெல்லையில் மிதமான மழை
திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களிலும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த தையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா்மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாநகரை பொருத்தமட்டில் வியாழக்கிழமை மழை ஓய்ந்திருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
முற்பகல் நேரத்தில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் , கேடிசி நகா், தச்சநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: அம்பாசமுத்திரம்-3, சேரன்மகாதேவி-2, மணிமுத்தாறு-5.80, பாளையம்கோட்டை-5, பாபநாசம் -7,ராதாபுரம் -20, திருநெல்வேலி-1.60.