பாளையங்கோட்டை அருகே காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த வெள்ளத்துரை என்பவா் தனக்குச் சொந்தமான காரில் தியாகராஜநகா் அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது காா் திடீரென தீ பிடித்ததால் காரில் இருந்தவா்கள் வெளியேறினா். தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த விபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.