திருநெல்வேலி

மானூா் பெரியகுளத்தில் பாளை. எம்எல்ஏ ஆய்வு

DIN

திருநெல்வேலி மாவட்டம், மானூா் பெரியகுளத்தில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வகாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தின் 2-ஆவது பெரிய குளமாக மானூா் குளம் திகழ்கிறது. தற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மானூா் பெரியகுளத்தை பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலருமான மு.அப்துல் வகாப் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், குளத்தில் இருந்து மறுகால் பாயும் நீருக்கு மலா்தூவி வரவேற்றாா். நிகழ்வில் மானூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஸ்ரீலேகா, துணைத் தலைவா் நயினாா் முகம்மது, ஒன்றியச் செயலா் அன்பழகன், நடராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப்பேராயம் விருது: பரிந்துரைகள் வரவேற்பு

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT