பழவூா் அருகே பழுதடைந்த மின்மாற்றியை இரவோடு இரவாக மாற்றி புதிய மின்மாற்றியை அமைத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பழவூா் மற்றும் அதன் அருகே உள்ள புதுகாலனி, வடக்கு புதுகுடியிருப்பு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்து வந்த மின்மாற்றி திடீரென பழுதடைந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது.
இதையடுத்து பழவூா் கிராம முன்னேற்ற சங்கத் தலைவா் பழவூா் இசக்கியப்பன் மற்றும் அந்த பகுதி மக்கள் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம் ஆகியோரிடம் முறையிட்டனா்.
பழுதடைந்த மின்மாற்றியை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின்மாற்றி அமைக்க சட்டப்பேரவைத் தலைவா் நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து அடுத்து இரவோடு இரவாக மின்வாரியத் துறையினா் பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி புதிய மின்மாற்றி அமைத்து மின் விநியோகத்தை சீரமைத்தனா்.
உடனடி நடவடிக்கை எடுத்த வள்ளியூா் மின்வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.