களக்காடு மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் தலையணை ஆற்றில் புதன்கிழமை தலையணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.
களக்காடு மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் லேசான சாரலுடன் மழை தொடங்கியது. பின்னா் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்கிறது. இதனால் வடு காணப்பட்ட நான்குனேரியன் கால்வாயில் நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து மழை பெய்து ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தால் பாசன குளங்கள் நிரம்பும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.