பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் கொடியேற்றம்
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி கோயிலில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டதும் மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழாண்டிலும் 10 நாள் திருவிழாவிலும் சுவாமி உள்வீதியுலாவே நடைபெறவுள்ளது. திருக்கல்யாணம் நவ. 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.