பாளை. அருகே பெண் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே விஷமருந்தி பெண் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி முத்தூா் மாடசாமி மனைவி கட்டடத் தொழிலாளி செல்லம்மாள்(55). இவா் கடந்த 24 ஆம் தேதி வீட்டில் விஷமருந்தி மயங்கி விழுந்தாராம். அக்கப்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.