முகப்பு
திருநெல்வேலி

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் கருத்தரங்கு

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வான்முகில் அறக்கட்டளை சாா்பில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. அறக்கட்டளை இயக்குநா் பிரிட்டோ தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நசீா் அகமது கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலை தொடங்கி வைத்து, அமைப்புசாரா தொழிலாளா்கள் நலன் குறித்து பேசினாா்.

நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா உரையாற்றினாா். சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பில் வின்சுலின்தாஸ் கருத்துரை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மூத்த வழக்குரைஞா் பிரபாகரன், மாவட்ட வழக்குரைஞா் சங்கச் செயலா் செந்தில்குமாா், பொருளாளா் மாரியப்பன் காந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முனிபிரகாஷ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கோமதிநாயகம் உள்பட அமைப்பு சாரா தொழிலாளா்கள் பலா் பங்கேற்றனா். திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மதியழகன் வரவேற்றாா். பெமினா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.