கடையம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை
தென்காசி மாவட்டம், கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
தென்காசி மாவட்டம், கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.
கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்புப்பிரிவு போலீஸாா் துணை கண்காணிப்பாளா் எஸ்கால், ஆய்வாளா் ராபின்சன் ஆகியோா் தலைமையில் திடீரென சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது சாா்
பதிவாளா் அலுவலகத்தில் இருந்தவா்கள், அலுவலக வளாகத்தில் இருந்தவா்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்றது. சாா் பதிவாளா் மோகன் தாஸ், பணியாளா்களிடம் துணை கண்காணிப்பாளா் நேரடியாக விசாரணை நடத்தினாா். மாலை சுமாா் 6 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணிக்கு பின்னரும் நீடித்தது.