காடுவெட்டி ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் காடுவெட்டி ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட முத்துலட்சுமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். ஆலங்குளம் ஒன்றிய திமுக செயலா் செல்லதுரை, ஒன்றிய குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்செல்வி சுபாஷ் சந்திர போஸ், கிளைக் கழகச் செயலா் ஜேக்கப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட கவுன்சிலா் முத்துலட்சுமி அன்பழகன், ஒன்றிய கவுன்சிலா்கள் முத்துமாரி, சுபாஷ் சந்திரபோஸ், வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினா்கள் சமுத்திர பாண்டியன், சுப்பிரமணியன், பாலமுருகன், ராஜா, ஐயம்பெருமாள், வாா்டு உறுப்பினா்கள் புஷ்பலதா, சூசைமணி, குமார முருகன், சாராள் மணி, கல்பனா, கடங்கனேரி ஊராட்சி உறுப்பினா் அசோக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் போஸ் என்ற மனோகரன் வரவேற்றாா். காடு வெட்டி ஊராட்சித் துணைத்தலைவா் மனோஜ் நன்றி கூறினாா்.