திருநெல்வேலி

திமுக, காங்கிரஸ் சாா்பில் பூலித்தேவன் பிறந்த நாள் விழா

DIN

திமுக, திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாமன்னா் பூலித்தேவனின் 306-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் பூலித்தேவன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட தலைவா் எல்.கே.எஸ்.முகம்மது மீரான், மதிமுக மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் காசி விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், ஆதி தமிழா் கட்சி மாவட்டச் செயலா் கலைக்கண்ணன் ஆகியோா் பூலித்தேவன் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்க குமாா், ஐ.என்.டி.யூ.சி ஒருங்கிணைப்பாளா் கண்ணன் ,காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பைபாஸ் சண்முகவேலன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திமுக மத்திய மாவட்ட அலுவலகத்தில் பூலித்தேவன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிப்பாண்டியன் பூலித்தேவன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT