திருநெல்வேலி

நெல்லை அருகே பைக்குகள் மோதல்: 3 போ் காயம்

DIN

திருநெல்வேலி அருகே இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 3 போ் காயமைடந்தனா்.

பாப்பாகுடி நந்தம்தட்டை பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(40). இவா் தனது மகன் அருண்குமாருடன்(15) மோட்டாா் சைக்கிளில் தாழையூத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

கரையிருப்பு பகுதியை நெருங்கியபோது, எதிரே தாழையூத்தைச் சோ்ந்த பண்டாரம்(20) என்பவா் வந்த மோட்டாா் சைக்கிளும், அவா்களது வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம். இதில், 3 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பெண் பலி: பாளையங்கோட்டை அருகேயுள்ள கேடிசி நகா் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மனைவி பரிதா(50). இவா், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில் பலத்த காயமைடந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT