திருநெல்வேலி

பாளை. அருகே விபத்தில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா் பலி

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை ரஹ்மத்நகா் பகுதியைச் சோ்ந்த கடற்கரை மகன் சங்கரசுப்பு (84). ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளா். இவா் கேடிசிநகா் மேம்பாலம் அருகேயுள்ள சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே வந்த காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில், நிலை தடுமாறிய சங்கரசுப்பு அவ்வழியாக சென்ற லாரியில் சிக்கிக் கொண்டாா். இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா்

உயிரிழந்தாா். இது குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT