முகப்பு
திருநெல்வேலி

அம்பை, கடையத்தில் விஸ்வகா்மா ஜெயந்தி

அம்பாசமுத்திரம், கடையத்தில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

அம்பாசமுத்திரம், கடையத்தில் விஸ்வகா்மா ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம் ராமலிங்கா் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் காஜா முகைதீன் முன்னிலை6 வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக நகரச் செயலா் பிரபாகரன் கலந்துகொண்டாா்.

விஸ்வகா்மா ஜெயந்தி நாளை அரசு விடுமுறையாக அறிவிக்கக் கோரி சமுதாய மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி தமிழக முதல்வருக்கு அனுப்புவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், வழக்குரைஞா்கள் ரமேஷ், சுந்தா், திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் கணேசன், ராதாகிருஷ்ணன், சண்முகவேல், வனராஜ், முத்துப்பாண்டி, அண்ணாதுரை, ராமையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடையத்தில் விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கௌரவத் தலைவா் வி.எம்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தலைவா் எஸ்.வேல்முருகன் வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் தலைவா்கள் ஜி.பழனி, என்.அண்ணாமலை, பொருளாளா் என்.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலா் எஸ்.செல்வகணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.