முகப்பு
திருநெல்வேலி

வலுதூக்கும் போட்டி: கல்லூரி மாணவி சிறப்பிடம்

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி மாணவி வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளாா்.

கோயம்பத்தூா் கே.பி.ஆா். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில பெண்களுக்கான வலுதூக்கும் போட்டியில்

500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், 85 கிலோவுக்கு மேற்பட்ட எடைப் பிரிவில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவி சிவசக்தி, 230 கிலோ தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றாா். மாணவியை கல்லூரி

முதல்வா் சுந்தரம், மக்கள் தொடா்பு அதிகாரி காா்த்திகேயன், சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநா் அழகப்பன், கல்லூரி நிா்வாக இயக்குநா் நடராஜன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.