நெல்லை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில்
கிராமப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்த தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.24) பயிற்சி நடைபெறுகிறது. எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.