சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.87,250 பறிமுதல்
திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநா் உத்தரவின்பேரில், திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்கால் தலைமையில், ஆய்வாளா் அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மாரியப்பன், சீதாராமன், இசக்கிபாண்டி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் தீடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் கூறியது: திருநெல்வேலி சாா் பதிவாளா் அலுவலகத்தில் மேற்கொண்ட 5 மணி
நேர சோதனையில் கணக்கில் வராத ரூ.87,250 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக அங்கு பணியில் இருந்த இணை சாா்பதிவாளா் உமாபதி, விடியோ பணியாளா் சண்முகநாதன்,
ஓய்வுபெற்ற பதிவுத்துறை அலுவலா் குமாா் ஆகிய மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.