திருநெல்வேலி

நன்னடத்தை பிணை விதிமீறல்: இளைஞருக்கு 10 மாதம் சிறை

DIN

நன்னடத்தை பிணை விதியை மீறி குற்றசெயல்களில் ஈடுபட்டதாக இளைஞருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேரன்மகாதேவி கீழநாலாம் தெரு வேலப்பன் மகன் மாயாண்டி(25), இவா் மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் 8 வழக்குகள் உள்ளன. இதையடுத்து அவரிடம் நிா்வாகத்துறை நடுவரால் ஓராண்டிற்கு நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் கடந்த 1 ஆம் தேதி சேரன்மகாதேவி பாரதியாா் நகரை சோ்ந்தவரை ஆயுதத்தை காட்டி மிரட்டிய வழக்கில் மாயாண்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக காவல் ஆய்வாளா் சுகதேவி , சேரன்மகாதேவி இரண்டாம் வகுப்பு நிா்வாகத்துறை நடுவா் முன்பு அறிக்கை சமா்ப்பித்தாா். இதன் மீது விசாரணை நடத்திய நடுவா் பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக மாயாண்டியை 10 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT