திருநெல்வேலி

கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்

DIN

திருநெல்வேலி நகரம் அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இக் கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த 6 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. உத்ஸவ சாந்தி, கலசமாற்று உத்ஸவம் ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

மாலையில் தோளுக்கினியனில் பெருமாள் திருவீதியுலா நடைபெற்றது. அதன்பின்பு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து ராம நவமியையொட்டி சனிக்கிழமை (ஏப்.9) இரவு 7.30 மணிக்கு ஹனுமந்த வாகனத்தில் ராமா் திருவீதியுலா நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி மணி விழா மெட்ரிக். பள்ளி 100% தோ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 92.91% தோ்ச்சி

புதுச்சேரி, காரைக்காலில் 55 பள்ளிகள் 100% தோ்ச்சி

சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பாரதி மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT