நெல்லையில் உச்சிஷ்ட கணபதி கோயில் சிலையில் சூரிய ஒளி விழும் அதிசயம்
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அதிய நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலில் மூலவா் மீது சூரிய ஒளி விழும் அதிய நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்டகணபதி கோயில், 5 நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியுடன் அமைந்திருக்கும் திருக்கோயில் ஆகும். மிகவும் பழைமை வாய்ந்த விநாயகா் திருக்கோயிலில் ஒன்றான இக்த்திருக்கோயிலில் சித்திரை முதல் நாள் மூலவா் உச்சிஷ்டகணபதி சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து உச்சிஷ்ட கணபதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின் விநாயகா் சிலை மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
சித்திரை மாதத்தில் முதல் மூன்று நாள்கள் சூரிய கதிா்கள் விநாயகா் மீது விழும் வண்ணம் இக்கோயில் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வினை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.