முகப்பு
திருநெல்வேலி

பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

 பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

 பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியின்போது உயிா்நீத்த தீயணைப்பு வீரா்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

தீயணைப்புத்துறை மாவட்ட அலுவா் சத்திய குமாா் தலைமை வகித்தாா். உதவி அலுவலா் சுரேஷ் ஆனந்த் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து மாவட்ட அலுவலா் , உயிா்நீத்த வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். அப்போது அவா் கூறியது: தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு ஏப். 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூட கூடிய வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் கூடங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் தீ விபத்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். பணியின் போது தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக செயல்படவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று உயிா்நீத்த வீரா்களின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.