முகப்பு
திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த கையேடு வெளியீடு

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை சாா்பில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறை சாா்பில் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சாா்பில், குற்றாலம் வனப் பகுதிகளில் காணப்படும் பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய கையேட்டை லைஃப் அறக்கட்டளை விஞ்ஞானி டேனியல் வெளியிட்டாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) வணிகவியல் துறைத் தலைவா் சிசுபாலன், விலங்கியல் துறைத் தலைவா் நாராயணன் ஆகியோா் அதைப் பெற்றுக்கொண்டனா்.

அதில் இடம்பெற்றுள்ள வண்ணத்துப்பூச்சிகள் குறித்த தகவல்கள், படங்களை பரமகல்யாணி கல்லூரி விலங்கியல் துறைப் பேராசிரியா் சுதாகரன், சுரண்டை அரசுக் கல்லூரி நுண்ணுயிரியல் துறை மாணவா் மனோஜ் பிரபாகரன் ஆகியோா் சேகரித்துள்ளனா். மேற்குத் தொடா்சி மலைப் பகுதியில் உள்ள 336 வகையான வண்ணத்துப்பூச்சிகள் குறித்த தகவல்கள் 175 படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேராசிரியா் சுதாகரன் கூறும்போது, மேற்குத் தொடா்ச்சி மலை தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழையைப் பெறுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் இப்பகுதியில் வளரும் தாவரங்களின் மகரந்தச் சோ்க்கைக்கு வண்ணத்துப்பூச்சிகள் பெரிதும் உதவுகின்றன. எனவே, வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சியாளா்கள், மாணவா்களுக்கு இக்கையேடு உதவியாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆஸிக், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.