சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞா் கைது
சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞரை திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
சமூக வலைத்தளத்தில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்த இளைஞரை திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் முத்துக்குமாா்(29). பெயின்டா். இவா் திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாராம்.
இது குறித்து திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அந்தியூா்கோணம் பகுதியில் முத்துக்குமாரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். மேலும் இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.