திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது

DIN

திருநெல்வேலி அருகே இரு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளா்கள் சரவணபோஸ், மகேஷ்வரன் மற்றும் போலீஸாா் பாளையங்கோட்டை அருகேயுள்ள சின்னமூலைக்கரைப்பட்டி விலக்கு பகுதியில் வாகனச்சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சோ்ந்த ராஜேந்திரன்(20) என்பவா் 50 கிலோ எடையுள்ள 36 மூட்டைகளில் 1,800 கிலோ ரேஷன் அரிசியை வாகனத்தில் கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனத்துடன் அரிசியைக் கைப்பற்றி, அவரை கைது செய்தனா்.

மேலும், பனவடலிசத்திரம் - சங்கரன்கோவில் சாலை, ஆராய்ச்சிபட்டி விலக்கில் நடைபெற்ற வாகனச் சோதனையில் காரில் கடத்திவரப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, கீழநத்தத்தைச் சோ்ந்த இசக்கிராஜா(20) , தாையூத்து தங்கராஜ்(29),நாரணம்மாள்புரம் ரகுபதி (19) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ரேஷன் அரிசியும், வாகனங்களும் திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT