திருநெல்வேலி

பாளை.யில் இறகுப்பந்து போட்டி

DIN

ஸ்டேன்சுவாமி நினைவு இறகுப்பந்து போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.

பாளைங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் எஸ்.எம்.ஜான் கென்னடி வரவேற்றாா். தூய சவேரியாா் கலைமனைகளின் அதிபா் வி.ஹென்றி ஜோசப் தலைமை வகித்தாா். அருள்பணி. எம்.சிலுவை அருள் மரிய ஜோசப், கா்னல் பாபிஜோசப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஒருங்கிணைப்பாளா்கள் வி.பால்கதிரவன், அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

லீக், நாக்அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதி, இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT