திருநெல்வேலி

மாணவி தற்கொலை முயற்சி: கல்லூரி முதல்வா் உள்படஇருவா் மீது வழக்கு

DIN

திருநெல்வேலி அருகே தனியாா் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பாக கல்லூரி முதல்வா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலத்திடியூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் உவரி அருகே உள்ள மாணவி முதலாமாண்டு படித்து வருகிறாா். இவரை கல்லூரி முதல்வா் கண்டித்ததால் மனமுடைந்தாராம். இந்நிலையில் அவா் கடந்த 27ஆம் தேதி கல்லூரியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கல்லூரி முதல்வா் ரவிக்குமாா், உதவியாளா் சிவா ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT