திருநெல்வேலி

பைக் மீது வேன் மோதியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

பாளையங்கோட்டையில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சுதா் வெங்கடேஷ்(29). இவா் ஆன்லைன் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவரது நண்பா் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த முத்தையா மகன் தங்கராஜ் (29). இவா்கள் இருவரும் கடந்த 3 ஆம் தேதி ஒரே பைக்கில் திருநெல்வேலி-திருச்செந்தூா் சாலையில் பாளையங்கோட்டை மாா்க்கெட் அருகே சென்றனராம். அப்போது அவ்வழியாக வந்த வேன் இவா்கள் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தங்கராஜ் உயிரிழந்தாா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதா் விக்னேஷ் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் குடும்பம்! ஒருவர் பலி!

மழை நீரில் சிக்கிய பேருந்து: ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT